×

மூணாறு அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலியான நிலையில், காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மூணாறு அருகே அம்மாநில அரசு பேருந்தின் டயர் வெடித்து கவிழ்ந்ததில் பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மூணாறில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற பேருந்து சாக்கோச்சி என்ற இடத்தில் இன்று காலை விபத்தில் சிக்கியது. பின்னல் வந்த வாகனத்திற்கு வழிவிட்டபோது துர்தஷ்ட வசமாக பேருந்தின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி கவிழ்ந்தது.  இந்த விபத்தில் படுகாயமடைந்த அடிமாலியை சேர்ந்த சஜீவ் என்ற பயணி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பேருந்து ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் காயமடைந்தனர். அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். டயர் வெடித்ததும் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, மரத்தில் மோதியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். …

The post மூணாறு அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலியான நிலையில், காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Thiranaru ,Thiruvananthapuram ,Thiruvananthapuram, Kerala ,Muradu ,Thiruaru ,Dinakaran ,
× RELATED கொல்லம் அருகே பரிதாபம் குட்டையில்...